என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » உள்ளாட்சி தேர்தல்
நீங்கள் தேடியது "உள்ளாட்சி தேர்தல்"
கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளாரா? உள்ளிட்ட விபரங்கள் விண்ணப்ப படிவங்கள் மூலமாக சேகரிக்கப்படுகின்றன.
திருப்பூர்:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் இந்த வாரம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறுவது எல்லா கட்சிகளிலும் தொடங்கி விட்டது.
இந்தநிலையில் ஓட்டுச்சாவடிகளில் பணியில் ஈடுபட உள்ள அதிகாரிகள் மற்றும் அலுவலர் பட்டியல் தயாரிக்க ஒவ்வொரு துறைக்கும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து திருப்பூர் மாவட்ட கல்வித்துறையில் தேர்தல் பணியாற்ற உள்ள ஆசிரியர்களின் விபரங்களை திரட்டும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.
அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்கள், கல்வி அலுவலக ஊழியர்கள் பெயர், பள்ளி, வசிக்குமிடம், சொந்த ஊர், ஏற்கனவே தேர்தல் பணியாற்றி உள்ளாரா? கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளாரா? உள்ளிட்ட விபரங்கள் விண்ணப்ப படிவங்கள் மூலமாக சேகரிக்கப்படுகின்றன.
உள்ளாட்சி தேர்தல் நடக்கவிருப்பதையடுத்து, இந்த தேர்தலுக்கான தயார் வழிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. #TamilnaduEC
சென்னை:
ஒரு வருடத்திற்கும் மேலாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் மாநில தேர்தல் ஆணையம் தயார் வழிமுறைகள் தொடர்பான அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
இதில் மாவட்டம், ஊராட்சி, ஒன்றியம் வாரியாக வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பான அனைத்து தயார் நிலைகள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை தயார் செய்யும் பணிகள் குறித்த விவரங்களும் உள்ளன. இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. #TamilnaduEC
ஒரு வருடத்திற்கும் மேலாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் மாநில தேர்தல் ஆணையம் தயார் வழிமுறைகள் தொடர்பான அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
இதில் மாவட்டம், ஊராட்சி, ஒன்றியம் வாரியாக வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பான அனைத்து தயார் நிலைகள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை தயார் செய்யும் பணிகள் குறித்த விவரங்களும் உள்ளன. இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. #TamilnaduEC
மாநில தேர்தல் ஆணையம் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வார்டு மறுவரையறை செய்யாமல், உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாது என சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TNLocalBodyElection #TamilNaduCivicPolls
சென்னை:
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கை விசாரித்த அப்போதைய சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர், ‘தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை 2017-ம் ஆண்டு நவம்பர் 17-ந் தேதிக்குள் நடத்தி முடிக்கவேண்டும்’ என்று கடந்த ஆண்டு செப்டம்பர் 4-ந் தேதி உத்தரவிட்டனர்.
ஆனால், இந்த உத்தரவை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் ஆணையர் மாலிக் பெரோஸ்கான், செயலாளர் ராஜசேகர் ஆகியோர் அமல்படுத்தவில்லை. இதையடுத்து அவர்கள் மீது தி.மு.க. சார்பில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு, ஆகஸ்டு 6-ந் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை தாக்கல் செய்யவில்லை என்றால், மாநில தேர்தல் ஆணையர், செயலாளர் ஆகியோர் மீது கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவிட்டனர்.
எனினும், ஆகஸ்ட் 6-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த போது தேர்தல் அட்டவணை தாக்கல் செய்யப்படவில்லை. மாறாக, தேர்தல் அட்டவணையை வெளியிடுவதற்கு கூடுதலாக 3 மாதம் அவகாசம் அளிக்கும்படி மாநில தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.
உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான வார்டு வரையறை அறிக்கை ஆகஸ்ட் 31-ம் தேதி தாக்கல் செய்ய உள்ளதாகவும், அறிக்கையை அரசு ஏற்றுக் கொண்ட 3 மாதங்களுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிக்கை வெளியிடப்படும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இந்நிலையில், இன்று இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆகஸ்ட் 31-ம் தேதி தாக்கல் செய்யப்படும் வார்டு மறுவரையறை பரிந்துரைகளை அரசு எப்போது ஏற்றுக்கொள்ளும் என நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு, ‘அறிக்கை கிடைத்த பின்பு தான் அதுகுறித்து முடிவு செய்யப்படும்’ என தமிழக அரசு சார்பில் பதிலளிக்கப்பட்டது.
வார்டு மறுவரையறை செய்யாமல் உள்ளாட்சி தேர்தலை நடத்த இயலாது. வார்டு மறுவரையறை செய்யாமல் தேர்தல் நடத்தக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது திமுக தான் என மாநில தேர்தல் ஆணையம் சார்பில் வாதிடப்பட்டது.
‘பலமுறை அவகாசம் வழங்கிய போதிலும், 2019-ம் ஆண்டுக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாட்டீர்கள் போல’ என நீதிபதி தனது அதிருப்தியை தெரிவித்தார்.
இதனை அடுத்து, மாநில தேர்தல் ஆணையத்துக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் மீதான விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டது. #TNLocalBodyElection #TamilNaduCivicPolls
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X